Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏலம் விடப்படும் அரிய வகை கோல்கொண்டா ப்ளூ வைரம் – இவ்வளவு விலையா?

Golconda Blue Diamond: இந்தியாவின் அரிய வகை வைரமாக கருதப்படும் கோல்கொண்டா ப்ளூ வைரம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஏலம் விடப்படவுள்ளது. இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வைரம் குறித்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஏலம் விடப்படும் அரிய வகை கோல்கொண்டா ப்ளூ வைரம் – இவ்வளவு விலையா?
கோல்கொண்டா ப்ளூ வைரம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 14 Apr 2025 19:34 PM

இந்தூர் (Indore), பரோடா ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களிடம் இருந்த அரிய வகை நீல வைரமான கோல்கொண்டா ப்ளூ என்ற வைரம் (Golconda Blue Diamond) தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரமானது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் கிறிஸ்டி நிறுவனத்தின் மேக்னிஃபிசன்ட் ஜுவல்ஸ் ஆல் வருகிற மே 14 ஆம் தேதி ஏலம் விடப்படவிருக்கிறது. இந்த வைரமானது 23.24 கேரட் எடை கொண்டது எனவும் பாரசீய நகை வடிவமைப்பாளர் ஜார் என்பவரால் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ35 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.300 கோடி முதல் 430 கோடி வரை இருக்கும். கோல்கொண்டா ப்ளூ போன்ற அரிய வகை ப்ளூ வைரங்கள் மிக அரிதாகவே ஏலம் விடப்படுகின்றன. இந்த வைரத்தை ஏலத்தில் எடுக்க உலக அளவில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கோல்கொண்டா ப்ளு வைரம் போன்ற அரிய வகை வைரங்கள் உலக அளவில் மிக குறைவான அளவிலேயே இருக்கின்றன. இதன் காரணமாகவே இதன் விலை கோடிக்கணக்கில் விற்கப்படுகிறது. பலருக்கு இதுபோன்ற வைரங்களை வைத்திருப்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது செல்வத்தின் குறியீடாக மதிக்கப்படுகிறது.

இந்த ப்ளூ வைரத்தின் சிறப்புகள்

இந்த வைரம் தெலங்கானா மாநிலம், கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது. இந்த கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து உலகின் மிகப்பெரிய வைரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவை கோஹினூர் வைரங்களுக்கு நிகரானதாக கூறப்படுகிறது. இந்த வைரங்கள் இந்தியாவின் பெருமைக்குரியதாக மதிக்கப்படுகிறது.  இந்த வைரத்தை இந்தூர் மன்னர் இரண்டாவது யேஷ்வந்தராவ் ஹோல்கர் பாதுகாத்து வந்திருக்கிறார்.  கடந்த 1923 ஆம் ஆண்டு பிரஞ்சு நகை வடிவமைப்பாளர் ஷோமேட் இந்த வைரக் கல்லை ஒரு ப்ரேஸ்லெட்டாக வடிவமைத்தார். மேலும் மன்னர் யேஷ்வந்தர் ராவ்  மேலும் இரண்டு கோல்கொண்டா வைரங்களை வாங்கியிருந்தார்.

இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் வைரம்

கடந்த 1947 ஆம் ஆண்டு, இந்த வைரக் கல் அமெரிக்காவுக்கு சென்றது அங்கு நகை வடிவமைப்பாளர் ஹாரி வின்ஸ்டன் அதை வாங்கி, ஒரு  அலங்கார நகையாக வடிவமைத்தார். பின்னர், இந்தக் கல் இந்திய பாரோடா மன்னர் குடும்பத்திற்கு சென்று, பிறகு அவர்களது தனிப்பட்ட அடையாளமாக மாறியது.

இந்த கோல்கொண்டா ப்ளூ வைரம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான பொக்கிஷமாக உள்ளது. இது உலகின் மிகச் சிறந்த மற்றும் அரிதான வைரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இதன் பாரம்பரியம் மற்றும் மகத்துவம் காரணமாக இந்திய மக்கள் இதனை பொக்கிஷமாக கருதுகின்றனர். இந்தக் கல் பார்வையில் எளிமையாக தெரிந்தாலும், அதன் உண்மையான மதிப்பு அதன் வரலாறு ஆகியவை இதன் மதிப்பை உயர்த்துகிறது. இந்தக் கல், மிக அரிதானது, அதன் நிறமும் அளவிலும் அசாதாரணமானது. அதன் அழகும், உறுதித் தன்மையின் காரணமாக இந்த வைரக் கல் இந்திய கலாச்சாரத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளது.

மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...