Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!

Pakistan's Minister Admits Terror Funding | ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தான் அமைச்சர் குவாஜா ஆசிப்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 25 Apr 2025 17:56 PM

பாகிஸ்தான், ஏப்ரல் 25 : பாகிஸ்தான் (Pakistan), பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளருக்கு பதில் அளித்த அவர், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காகவே இத்தகைய செயலை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், பயங்கரவாதம் குறித்து குவாஜா ஆசிப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு & காஷ்மீர் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை – பாகிஸ்தான் அமைச்சர்கள்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்ளிட்ட அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று (ஏப்ரல் 24, 2025) செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர்கள், இந்தியா தங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், காஷ்மீர் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆதாரம் இருந்தால் இதனை பொது வெளியில் காட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும், தாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

நேரலையில் உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

மூன்று தசாப்தங்களாக நாங்கள் இதனை செய்து வருகிறோம் – குவாஜா ஆசிப்

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குவாஜா ஆசிப் இன்று (ஏப்ரல் 25, 2025) தனியார் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு மற்றும் பயிற்சி அளித்த நீண்ட வரலாறு குறித்து செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், தாங்கள் சுமார் மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக இந்த மோசமான செயலை செய்து வருவதாக ஒப்புக்கொண்டார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...