Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

 

Read More

Yoga Narasimhar: பிரதோஷ நாளில் அவதாரம்.. ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில்!

மதுரை ஒத்தக்கடையில் அமைந்திருக்கும் யோக நரசிம்மர் கோயில், யானைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். ரோமச முனிவரின் யாகத்தால் உருவான இக்கோயில், பிரதோஷ பூஜைக்குப் பெயர் பெற்றது. நரசிம்மரின் உக்கிரம் தணிந்த தலமாகவும், திருமணத் தடையை நீக்கும் தலமாகவும் இது போற்றப்படுகிறது.

Madurai: தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில் தெரியுமா?

கல்யாண சுந்தரேஸ்வரர் - பால மீனாம்பிகை திருக்கோயில், மணக்கோலத்தில் காட்சி தரும் மீனாட்சியால் பிரசித்தி பெற்றது. வில்வ மரம் தலவிருட்சமாக உள்ள இக்கோயில், பாண்டிய மன்னர் காலத்து தொன்மை வாய்ந்தது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வழிபாடு செய்வது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

Temple Special: அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவன் கோயில்!

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக பார்க்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் அமைந்த இந்த ஆலயத்தில் வழிபடுவதால் நோய் நீங்கும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜல்லிகை என்னும் அசுரப் பெண்ணின் பக்தியினால் இந்த கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Tamil New Year Celebration: 2025 ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பஞ்சாங்க வாசிப்பு நடைபெற்றது. பிள்ளையார்பட்டி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக அன்னதானம், மருத்துவம் உள்ளிட்ட சிறப்புவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பங்குனி உத்திரத்தில் உட்சம் தொட்ட தேங்காய்.. ஏலத்தில் ரூ.52 ஆயிரம் போன அதிசயம்..!

Panguni Uttaram Festival: போடிநாயக்கனூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடந்தது. 2025 ஏப்ரல் 11 அன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையின் மாங்கல்யம் முன்பு வைக்கப்பட்ட தேங்காய் ரூ.52,000க்கு ஏலம் போனது.

Thayumanavar Temple: தாயாக மாறி பிரசவம் பார்த்த சிவன்.. இந்த கோயில் பற்றி தெரிஞ்சுகோங்க!

திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமி கோயில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக உள்ளது. இந்த கோயிலின் வரலாறானது ஆதிசேஷன்-வாயு பகவான் போட்டி, திரிசிரன் தவம், சிவன் அருள் போன்றவை உள்ளடக்கிறது. மேலும் இந்த கோயில் பற்றிய சிறப்புகளை காணலாம்.

திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலத்திற்கு செல்ல இதுதான் சரியான நேரம்… அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்

Pournami Girivalam: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரம் தொடர்பான அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 12ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 2025 ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 6.08 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kerala: அறிவியல் ஆய்வுகளுக்கு சவால் விடும் சிவன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

Kerala Temple Special: நீர்ப்புதூர் கோயில், அதன் சுயம்புவாக உருவான சிவலிங்கம் மற்றும் அதிசய நீர் ஆகியவற்றால் பிரபலமானது. அறிவியலால் கூட விளக்க முடியாத இந்த கோயில், அதன் கட்டடக்கலை மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகியவற்றால் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது. ஆண்டு முழுவதும் சிவலிங்கத்தைச் சுற்றி இருக்கும் நீர், நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.

Hanuman Temple: அமர்ந்த நிலையில் அனுமன்.. அர்ஜூன் கட்டிய கோயிலின் சிறப்புகள்!

நடிகர் அர்ஜுன் சென்னையில் கட்டிய பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலின் சிறப்புகள் பற்றிக் காணலாம். 28 அடி உயரமுள்ள ஒற்றைக் கல் அனுமன் சிலையைக் காண அப்பகுதி மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த கோயிலானது நடிகர் அர்ஜூனின் நீண்ட நாள் கனவு என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Utrakosamangai: உலகின் முதல் கோயில்.. உத்திரகோசமங்கையின் சிறப்புகள் தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் கோயில், உலகின் முதல் சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. ராவணன், மண்டோதரி வழிபட்ட தலம் இது என சொல்லப்படுகிறது. திருமணத் தடை, குழந்தைப் பேறு போன்ற பிரச்னைகளுக்கு இங்கு வந்து வணங்கினால் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சுயம்பு மூர்த்தியாக சிவன்.. மலை மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தெரியுமா?

ஓசூரின் மாநகர் பகுதியில் மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய ஆலயமாக விளங்குகிறது. சுயம்பு மூர்த்தியாக அருளும் சந்திரசூடேஸ்வரர் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய கடவுளாக பார்க்கப்படுகிறார். இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தெய்வமாக திகழும் இந்த கோயில் பற்றிக் காணலாம்.

உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் தேர் திருவிழா கோலாகல தொடக்கம்

Thiruvarur Chariot Festival: திருவாரூரில் 2025 ஏப்ரல் 07 இன்று நடைபெற்ற ஆழித்தேர் திருவிழாவை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டனர். 96 அடி உயரம் மற்றும் 350 டன் எடையுடன் திருவீதிகளில் இழுக்கப்பட்ட இந்த தேர், இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தின் பெருமைச் சின்னமாக திகழ்கிறது. தேரின் வரலாற்று சிறப்புகள், தேவலோகச் சம்பந்தங்கள், மற்றும் அதன் அபூர்வ வடிவமைப்பு இவ்விழாவை மேலும் சிறப்பித்தன.

Ramar Temple: ராமருக்கே உரித்தான கோதண்டராமசாமி கோயில்.. எங்கு இருக்கு தெரியுமா?

ராமர் மிக முக்கிய தெய்வமாக எண்ணற்ற மக்களால் வணங்கப்படுகிறார். தமிழ்நாட்டில் பல இடங்களில் ராமருக்கு கோயில் இருந்தாலும் 10 இடங்களில் இருக்கும் கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம்.

Thirupparankundram: அமர்ந்த நிலையில் முருகன்.. திருப்பரங்குன்றம் சிறப்புகள் தெரிஞ்சுகோங்க!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது. சுப்பிரமணிய சுவாமி மூலவராகவும், தெய்வானை அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சூரபத்மனை வதம் செய்த பின், தெய்வானையை மணந்த முருகன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயில் குடைவரை கோயிலாகும்.

Yoga Narasimhar: யோகாசன நிலையில் யோக நரசிம்மர், ஆஞ்சநேயர்.. இந்த கோயில் பற்றி தெரியுமா?

சப்தரிஷிகளின் தவத்தின் பயனாக உருவான இந்த ஆலயம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு வழிபாடு செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

விண்வெளி கொள்கை... 10,000 பேருக்கு வேலை ரெடி!
விண்வெளி கொள்கை... 10,000 பேருக்கு வேலை ரெடி!...
தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை!
தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை!...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்!...
மோகன்லாலின் L2: எம்புரான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
மோகன்லாலின் L2: எம்புரான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
இரட்டை இலை வழக்கு - ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இரட்டை இலை வழக்கு - ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!...
கோவையில் பூத் கமிட்டி மாநாடு.. தேதி குறித்த விஜய்!
கோவையில் பூத் கமிட்டி மாநாடு.. தேதி குறித்த விஜய்!...
அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை
அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை...
MI vs SRH : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி !
MI vs SRH : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி !...
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!...
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!...
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !...