Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மதுரையில் சோகம்.. பூனை கடித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

Madurai Crime News : மதுரை மாவட்டத்தில் பூனை கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் தனியாக இருந்த இளைஞர், மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மதுரையில் சோகம்.. பூனை கடித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?
உயிரிழந்த இளைஞர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Apr 2025 11:42 AM

மதுரை, ஏப்ரல் 27 : மதுரையில் பூனை கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில், மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பட்டப்படிப்பை முடித்த அவர், தினமும் எதாவது ஒரு வேலைக்கு சென்றுக் கொண்டு வந்திருக்கிறார். இவர் தனது வீட்டில் இரண்டு பூனைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை பூனை கடித்துள்ளது.

பூனை கடித்ததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

இதனால், அவருக்கு சிறு காயம் ஏற்பட்டதை அடுதது, டிடி ஊசி மட்டும் செலுத்தி கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பாலமுருகனுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், பாலமுருகன் சாப்பிடாமலும் இருந்துள்ளார்.

இதனை கவனித்த குடும்பத்தினர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரேபிஸ் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் குடும்பத்தினர், அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கின்றனர்.

அப்போது, தனது காலில் பூனை கடித்துள்ளதை பாலமுருகன் கூறினார். படுத்துக் கொண்டு இருக்கும் காலில் இரண்டு பூனைகள் சண்டையிட்டுள்ளன. அப்போது, திடீரென பாலமுருகன் காலை பூனை கடித்துள்ளது. சிறிய காயம் ஏற்பட்டதால், டிடி ஊசி மட்டும் செலுத்தியதாக பாலமுருகன் கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

இதனை அறிந்து பெற்றோர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரேபிஸ் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, பாலமுருகன் ஆக்ரோஷமாக இருந்துள்ளார். இதனால், அவரை ரேபிஸ் நோய்க்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தனிமையில் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன், மருத்துவமனை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், சந்தேகம் மரணம் என்று குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

பூனை, நாய் போன்றவை கடித்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதற்கான தடுப்பூசியை செலுத்தி கெள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதை செய்யாமல், சிறிது காயம் என அலட்சியமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!
ஹல்தி விழாவில் டைனோசர் உடையணிந்து வந்த மணப்பெண் வீடியோ வைரல்!...
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!
அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது- விக்ரம்!...
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!
குட்டி யானைக்கு சாப்பிட சொல்லி தரும் தாய் யானை - வைரல் வீடியோ!...
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!
பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு!...
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்
சிம்புவுடன் நடிக்கணும்னா ஒரு கண்டிஷன்.. ஹரிஷ் கல்யாண் சொன்ன பதில்...
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா..
தமிழக அமைச்சரவை மாற்றம்.. பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா.....
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்
செப்சிஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை-பதஞ்சலி தகவல்...
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?
தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?...
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!
STR49ல் சிம்புவிற்கு ஜோடியாக இணையும் கயாடு லோஹர்!...
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!
பட்டையை கிளப்பிய மும்பை.. பரிதாபமாக தோற்ற லக்னோ!...
கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா - RBI கூறுவது என்ன?
கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா - RBI கூறுவது என்ன?...