ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. நோட் பண்ணுங்க!

TNSCTC Special Buses : முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கம், மாதவதம், கோயம்பேட்டில் இருந்து 2025 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஊருக்கு போற பிளானா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. நோட் பண்ணுங்க!

சிறப்பு பேருந்துகள்

Updated On: 

24 Apr 2025 07:52 AM

சென்னை,  ஏப்ரல் 24: சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான  நாளை முதல் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை  நாட்களில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, சென்னை பேருந்து நிலையங்களில்  வழக்கத்தை விட  பயணிகள் கூட்டம் அதிமாக இருக்கும்.

சிறப்பு பேருந்து இயக்கம்

தற்போது, கோடை விடுமுறையும்  இருப்பதால் சொந்த ஊர்களுக்கு மக்கள்  செல்வார்கள். இதனால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.  பயணிகளின் சிரமமின்ற தங்கள் ஊருக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

அந்த வகையில், 2025 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான நாளை முதல் இயக்கப்படுகிறது. அதாவது, 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை முகூர்த்தம், 2025 ஏப்ரல் 26ஆம் தேதி சனிக்கிழமை, 2025 ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுகிழமை என வார விடுமுறை நாட்கள் வருகிறது.

இதனால், சென்னையில் இருந்தும் பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.   அதன்படி, 2025 ஏப்ரல் 25ஆம் தேதி (நாளை) சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 60 பேருந்துகளும், 2025 ஏப்ரல் 26ஆம் தேதி 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

எந்தெந்த ஊர்களுக்கு?

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 2025 ஏபரல் 25ஆம் தேதி 20 பேருந்துகளும், 2025 ஏப்ரல் 26ஆம் தேதி 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, திருச்சி பகுதிகளுக்கு 2025 ஏப்ரல் 25ஆம் தேதி 370 பேருந்துகளும், 2025 ஏப்ரல் 26ஆம் தேதி 450 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 25ஆம் தேதி அன்று 7,970 பயணிகளும் 2025 ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 5,115 பயணிகளும் மற்றும் 2025 ஏப்ரல் 27ஆம் தேதி அன்று 7,189 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் https://www.tnstc.in/OTRSOnline/ என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.