“தேர்தல் நேரத்தில் தான் மக்கள் மீது கரிசனமா?” சிலிண்டர் விலை உயர்வை கண்டித்த விஜய்!
TVK Vijay : சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 08: சிலிண்டர் விலை உயர்வுக்கு (Gas Cylinder Price Hike) மத்திய அரசை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (tamilaga vettri kazhagam vijay) கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 2025 ஏப்ரல் 07ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலையும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு உயர்த்தியது.
சிலிண்டர் விலை உயர்வு
அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த விலை ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வை தொடர்ந்து இனி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.868.50 ஆகவும் இருக்கும். மேலும், உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.550 ஆகவும் இருக்கும். இதுதவிர, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்தி உள்ளது.
சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த…
— TVK Vijay (@TVKVijayHQ) April 8, 2025
இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.