Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விஜய் வருகை… கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!

Coimbatore TVK Booth Committee Meeting : கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், ரசிர்கள் என பலரும் குவிந்துள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பூம் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க கோவைக்கு விஜய் வருகை தந்துள்ளார்.

விஜய் வருகை… கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழக விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 10:44 AM

கோயம்புத்தூர், ஏப்ரல் 26: கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (Tamilaga vettri kazhagam) பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜய்  (TVK Vijay) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்துள்ளார். விஜயை வரவேற்பதற்காக கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், ரசிர்கள் என பலரும் குவிந்துள்ளனர். தலைவா தலைவா என கோஷமிட்டு கோவை விமானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். மேளதாளத்துடன் விஜய்யை வரவேற்ற தயாராக உள்ளனர்.

த.வெ.க பூத் கமிட்டி மீட்டிங்

கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக விஜய் கோவைக்கு வருகை தருவதால் அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால், கோவை நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.  கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு அங்கு குவிந்துள்ளனர்.  இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியால் வைரலாகி வருகிறது.

2024ஆம்  ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்சி தொடங்கிய வேகத்திலேயே, கட்சி மாநாடு,  செயற்குழு கூட்டம் என அடுத்தடுத்து நடத்தி வருகிறது. மேலும், கட்சியை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட செயலாளர்கள்,  பொருளாளர்கள் உள்ளிட்டோரை நியமித்து வந்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிட்டார். கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் பூத் கமிட்டி கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதன்படி, முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27ஆம் தேதி பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்

அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில்  நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில்  கட்சி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.  பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கோவை மாவட்டம் குரும்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பூத் கமிட்டி கூட்டம் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இரண்டு  நாட்களுக்கு நடைபெறும் கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   இதற்கிடையில், பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜய், 2025  ஏப்ரல் 26ஆம்  தேதியான இன்று  சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார். கோவைக்கு வந்த அவரை வரவேற்பதற்காக  விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிர்கள், தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், கோவையில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!
தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!...
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?...
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!...
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?...
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!...
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்...
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!...
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்...
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!...
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!...
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி...