படுத்தி எடுக்கப்போகும் வெயில்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் தகவல்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் கணித்துள்ளது.

படுத்தி எடுக்கப்போகும் வெயில்.. 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் தகவல்!

வெப்பநிலை

Updated On: 

13 Apr 2025 06:19 AM

சென்னை, ஏப்ரல் 13: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை (Tamil Nadu Heatwave Alert) ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று  வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே அதீத வெப்பநிலை இருந்து வருகிறது. பல்வே மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

படுத்தி எடுக்கப்போகும் வெயில்

இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதற்கு சிரமப்பப்படுகின்றனர். அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. ஆனால், அந்த மழை தற்போது குறைந்து, வெயில் கொளுத்தி எடுக்கிறது.

இந்த நிலையில், வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைர தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்


அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தல ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்ச 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணரமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை திருச்சி விமான நிலையத்தில் 39.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 18.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கோடையில் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.