கொளுத்தி எடுக்கும் வெயில்.. இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மேற்கு திசை காற்று காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தி எடுக்கும் வெயில்.. இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

வெப்பநிலை

Published: 

20 Apr 2025 06:16 AM

சென்னை, ஏப்ரல் 20: தமிழக்ததில் வெப்பநிலை (Tamil Nadu Heatwave Alert) மேலும் உயரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. 2025 மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.

கொளுத்தி எடுக்கும் வெயில்

இன்னும் மே, ஜூன் மாதங்களில் வெப்பநிலை இதைவிட அதிகமாக இருக்கு என வானிலை நிபுணவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னயிலும் வெப்பநிலை மோசமாக உள்ளது. குறிப்பாக, மதிய நேரங்களில் அனல் காற்று பயங்கரமாக வீசுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்


சென்னையை பொறுத்தவரை, 2025 ஏப்ரல் 20ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37 முத 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 22.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அடுத்த 10 நாட்கள் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதனால், வரும் நாட்களில் வெயில் அதிகமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.