Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TNEB அதிர்ச்சி அறிவிப்பு.. இனி இவர்களுக்கு இலவச மின் இணைப்பு கிடையாது..!

Tamil Nadu Electricity Board: தமிழகத்தில் சூரியசக்தி மோட்டார் பம்ப் அமைத்த விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முடியாது என மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் வாரியம் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

TNEB அதிர்ச்சி அறிவிப்பு.. இனி இவர்களுக்கு இலவச மின் இணைப்பு கிடையாது..!
சூரியசக்தி மோட்டார் பம்ப் அமைத்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு இல்லைImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 13 Apr 2025 08:05 AM

தமிழ்நாடு ஏப்ரல் 13: சூரியசக்தி மோட்டார் பம்ப் (Solar motor pump) அமைத்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு இல்லை (No Power Connection) என்ற தமிழ்நாடு மின் வாரிய (Tamil Nadu Electricity Board) உத்தரவால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூரியசக்தி மோட்டார் பம்ப் அமைத்த விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு தகுதி இல்லை என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு தாமதமாகுவதால் சிலர் சோலார் பம்ப் அமைத்துள்ளனர். இப்போது அவர்களது விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டாம் என உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின் வாரியம் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் பயன்படும் பம்ப் செட்களுக்கு மின்வாரியம் மூலமாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகள் எந்தவொரு கட்டணமும் செலுத்தாமல் தங்களுடைய நிலங்களை பாசனம் செய்ய இந்த மின்சாரத்தை பயன்படுத்த முடிகிறது. மின் பயன்பாடுக்கான செலவினத்தை மாநில அரசு முழுமையாக மானியமாக வழங்குகிறது.

இந்தத் திட்டம், விவசாயிகளின் செலவுகளை குறைத்து, விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. ஆனால் மின்வாரியத்தின் நிதிசிக்கலால், ஒவ்வொரு ஆண்டும் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

சூரிய சக்தியை (சோலார் பவர்) பயன்படுத்தும் விவசாயிகள்

இந்த நிலவரத்தில், மின் இணைப்பு கிடைக்க தாமதமாகும் என்பதனால் சில விவசாயிகள் தங்களின் நிலங்களில் சூரிய சக்தியை (சோலார் பவர்) பயன்படுத்தி, சொந்த செலவில் மோட்டார் பம்ப் அமைத்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியசக்தி மோட்டார் பம்ப் அமைத்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு இல்லை

இதனையடுத்து, ‘விவசாயிகள் தாங்களாகவே அல்லது அரசு மானிய உதவியுடன் சூரியசக்தி பம்ப் செட்கள் அமைத்திருந்தால், அவர்களுக்கு இனி இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்’ என்ற உத்தரவை, மின் வாரியம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ளது.

விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு

இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பை எழச் செய்துள்ளது. விவசாய கூட்டமைப்பினர் கூறுவதாவது, “விவசாய மின் இணைப்புக்காக பலரும் ஆண்டு கணக்கில் காத்திருக்கிறார்கள். சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் நிலையில், சிலர் காத்திருக்கும் இடையே, சூரியசக்தி வழியாக வேலையை முன்னெடுத்துவிட்டனர் என்பதற்காக அவர்களுக்கு மின் இணைப்பு மறுக்கப்படுவது நியாயமல்ல.

மேலும், மத்திய அரசு வழங்கும் மானியத்தின் கீழ் rooftop solar panel மூலம் குறைந்த அளவு மின்சாரம் தயாரித்து பம்ப் செட்டை இயக்கும் விவசாயிகளும் இக்கட்டாய உத்தரவில் பாதிக்கப்படுகின்றனர்” என்றனர். மின் வாரியத்தின் இந்த புதிய உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...