Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?.. முதலமைச்சர் கேள்வி!

Stalin Questions Centre on NEP | இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழகத்தில் அமலபடுத்த திமுக அரசு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?.. முதலமைச்சர் கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 22 Apr 2025 07:51 AM

சென்னை, ஏப்ரல் 22 : தேசிய கல்விக் கொள்கையின் (NEP – National Education Policy) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அந்த மாநில முதலமைச்சரின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தேசிய கல்விக் கொள்கை. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளை படிக்க வேண்டும். மாணவர்களின் செயல்திறனையும், கல்வியையும் மேம்படுத்த இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதாக மத்திய அரசு கூறினாலும், இந்த திட்டத்தின் மூலம் புதிய இந்தியை திணிக்க முயல்வதாக குற்றம்சாட்டி திட்டத்தை அமல்படுத்த விடாமல் திமுக அரசு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா. அப்படியில்லை என்றால் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியையை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்யும் தெளிவான உத்தரவை அரசு வெளியிடுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு அநியாயமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,252 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி. ஆகிறாரா அண்ணாமலை..? ஆந்திரா மூலம் நடக்கும் பேச்சுவார்த்தை
எம்.பி. ஆகிறாரா அண்ணாமலை..? ஆந்திரா மூலம் நடக்கும் பேச்சுவார்த்தை...
ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!...
காட்டி கொடுத்த 6-ஆம் விரல்... காதலியை எரித்த கொன்ற காதலன் கைது..!
காட்டி கொடுத்த 6-ஆம் விரல்... காதலியை எரித்த கொன்ற காதலன் கைது..!...
பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு...
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையில் முக்கிய மாற்றம்.. இன்று முதல் அமல்
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையில் முக்கிய மாற்றம்.. இன்று முதல் அமல்...
போப் பிரான்சிஸ் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
போப் பிரான்சிஸ் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!...
சிஎஸ்கே இப்படி தடுமாறி பார்த்ததில்லை.. சுரேஷ் ரெய்னா ஆதங்கம்!
சிஎஸ்கே இப்படி தடுமாறி பார்த்ததில்லை.. சுரேஷ் ரெய்னா ஆதங்கம்!...
மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்..!
மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்..!...
மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!...
தமிழகத்தில் மாறி மாறி பொழியும் மழையும் வெயிலும்....
தமிழகத்தில் மாறி மாறி பொழியும் மழையும் வெயிலும்.......
ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா?
ககெய்போ என்ற ஜப்பானிய சேமிப்பு முறை பற்றி தெரியுமா?...