Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க!

Chennai AC EMU Train : சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஏசி ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய நேர அட்டவணைப்படி, 2025 மே 2ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணுங்க!
சென்னை ஏசி மின்சார ரயில்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Apr 2025 06:23 AM

சென்னை, ஏப்ரல் 30: சென்னையில் புறநகர் ஏசி மின்சார ரயில் (Chennai AC EMU Train) சேவையின் நேரத்தை தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் மாற்றி அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய கால அட்டவணைப்படி, 2025 மே 2ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தோடு, புறநகர் மக்களை இணைக்கும் போக்குவரத்து  சேவையில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.  போக்குவரத்து நெரிசலை  குறைப்பதில் மின்சார ரயிலின்  சேவை இன்றியமையாதது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு கீழ் 600க்கும் மேற்பட்ட  மின்சார ரயில்  சேவைகள் இயக்கப்படுகிறது.

சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

இதற்கிடையில், கோடை காலத்தில் மக்கள் சிரமம் அடைவதை தவிர்க்க,   மின்சாரயில் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில், சென்னையில் முதல் ஏசி மின்சார ரயில் சேவை 2025 ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்று கிழமையை தவிர அனைத்து நாட்களிலும் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கத்திலும் தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் தற்போது இயக்கப்படுகிறது. இதற்கிடையில், எந்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மக்களிடம் கருத்துகளை கேட்டது.

அதில் பெரும்பாலான மக்கள் வேலைக்காக கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடங்களில் நேரத்தை முன்கூட்டியே அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மேலும், மாலையிலும் கூடுதல் சேவை வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளே நோட் பண்ணுங்க

இதனை கருத்தில் கொண்டு, ஏசி மின்சார ரயில் சேவை நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய கால அட்டவணைப்படி 2025 மே 2ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்று கிழமை தவிர, மொத்தம் 8  சேவைகள் தினமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காலை 6.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு காலை 7.35 மணிக்கும் சென்றடைகிறது. இரண்டாவது ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, கடற்கரைக்கு 9.25 மணிக்கு சென்றடைகிறது.

மூன்றாவது ரயில் சென்னை கடற்கரையில் இருந்து 9.41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு 10.36 மணிக்கு சென்றடைகிறது. நான்வது ரயில் தாம்பரத்தில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு, கடற்கரைக்கு 1.55 மணிக்கு சென்றடைகிறது. சென்னை கடற்கரையில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு மாலை 4.00 மணிக்கு சென்றடைகிறது.

மேலும், செங்கல்பட்டில் இருந்து 4.30 மணிக்கு புறப்படும் ரயில், கடற்கரைக்கு 6.00 மணிக்கு சென்றடைகிறது. தொடர்ந்து, சென்னை கடற்கரையில் இருந்து 6.17 மணிக்கு புறப்படும் ரயில், செங்கல்பட்டுக்கு 7.50 மணிக்கு சென்றடைகிறது. செங்கல்பட்டில் இருந்து 8.10 மணிக்கு புறப்படுத் ரயில் தாம்பரத்திற்கு 8.50 மணிக்கு சென்றடைகிறது. இந்த அட்டவணைப்படி தான், மே 2ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? - அதன் சிறப்புகள் இதோ!...
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி
அமெரிக்க ஏர்லைன்ஸ்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி...
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?
ஐயப்பனே விரும்பி காட்சிக்கொடுத்த கோயில்.. எங்கே தெரியுமா?...
"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!...
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு...