Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுற்றுலாப்பயணிகளே…! கன்னியாகுமரியில் கண்ணாடி நடைபாலம் மீண்டும் திறப்பு

Glass walkway: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்கும் இடையே அமைந்துள்ள கண்ணாடி நடைபாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. 2025 ஏப்ரல் 15 முதல் 4 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த பாலம் கடல் மேல் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண்ணாடி பாலமாகும்.

சுற்றுலாப்பயணிகளே…! கன்னியாகுமரியில் கண்ணாடி நடைபாலம் மீண்டும் திறப்பு
கண்ணாடி நடைபாலம்
sivasankari-bose
Sivasankari Bose | Published: 20 Apr 2025 06:33 AM

கன்னியாகுமரி ஏப்ரல் 20: கன்னியாகுமரியில் கண்ணாடி நடைபாலம் (Glass walkway in Kanyakumari) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் (Glass walkway in Kanyakumari) நினைவு மண்டபத்துக்கு இடையே கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 2025 ஏப்ரல் 15-ம் தேதி முதல் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதனால் 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் நடைபாலம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு பயணம் செய்தனர். பின்னர் கண்ணாடி நடைபாலத்தில் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்.

திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வழியாக கண்ணாடி நடைபாலம்

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபமும் முக்கிய சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன. விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வழியாக கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணியாழ் மூடல்

இந்த நடைபாலத்தில் 2025 ஏப்ரல் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக அனுமதி வழங்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த வேலைகளை நடத்தினர். பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி

நான்கு நாட்கள் நீடித்த இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் படகு பயணம் செய்தனர். பின்னர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு, கண்ணாடி நடைபாலத்தின் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரியில் கண்ணாடி நடைபாலம்

கன்னியாகுமரியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலம், இந்தியாவில் கடல் மீது அமைக்கப்பட்ட முதல் கண்ணாடி பாலமாகும். இது, உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை நேரடியாக இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 133 அடி உயரமும் கொண்ட இந்த பாலம், போஸ்ட்ரிங் ஆர்ச் (bowstring arch) வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.37 கோடி செலவிடப்பட்டுள்ளது.

வினைகளுக்கு எதிராக தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைப்பு

இந்த கண்ணாடி பாலம் கடலின் உலர்ந்த காற்றும், உப்புத்தன்மையும் போன்ற வினைகளுக்கு எதிராக தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கே 360° நோக்கத்தில் கடலின் அழகைப் பார்த்து ரசிக்கலாம். முன்பு படகு மூலம் மட்டுமே இந்த நினைவிடங்களை பார்வையிட முடிந்தது. தற்போது, இந்த புதிய பாலம் வழியாக நடந்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்காக சில முக்கியமான விதிமுறைகள் அமல்

சுற்றுலா பயணிகளுக்காக சில முக்கியமான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பாலத்தில் காலணிகள் அணிய தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இப்புதிய கண்ணாடி பாலம், தற்போது கன்னியாகுமரியின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. பார்வையாளர்களுக்கு இது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?...
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...