அகவிலைப்படி உயர்வு.. ரூ.5 லட்சம் திருமண முன்பணம்.. அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!
CM 110 Announcement in Tamil Nadu Assembly | சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன் பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 28 : அரசு ஊழியர்களுக்கான ஈட்டியன் விடுப்பை சரண் செய்யும் (Cash Benefit for Earned Leave) நடைமுறை இந்த ஆண்டே (2025) அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28, 2025) அறிவித்துள்ளார். அதன்படி, 01.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை அரசு ஊழியர்கள் சரண் செய்து பலன் பெறலாம் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்
மார்ச் 2025 முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் 14, 2025 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget 2025) தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30,2025 உடன் முடிவடையும் நிலையில், இன்று (ஏப்ரல் 28, 2025) வழக்கம்போல சட்டப்பேரவை தொடங்கியது. இன்றைய நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் வெளியிட்டார்!#TNAssembly #DMK4TN pic.twitter.com/ua7a5FOM3Z
— DMK (@arivalayam) April 28, 2025
அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
- ஜனவரி 1, 2025 முதல் அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை 2025 முதலே அமல்படுத்தப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் ரூபாய் 10,000-ல் இருந்து ரூபாய் 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- கல்வி முன்பணமாக தொழிற்கல்விக்கு ரூபாய் 1 லட்சம், காலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூபாய் 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- திருமண முன் பணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.
- அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 500-ல் இருந்து ரூபாய் 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் ரூபாய் 4,000-ல் இருந்து ரூபாய் 6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
இத்தகைய முக்கியமான மற்றும் பயனுள்ள 9 திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.