Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாவட்ட ஆட்சியரை அலறவிட்ட விவசாயிகள்.. எங்கே தெரியுமா…?

Tamil Nadu Farmers Grievance Redressal Meeting: தமிழக விவசாயிகள் குறைதீர் கூட்டம் கடந்த நாட்களிலும் தற்போது நடைபெற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில், விவசாயிகள் தங்களுடைய குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

மாவட்ட ஆட்சியரை அலறவிட்ட விவசாயிகள்.. எங்கே தெரியுமா…?
விவசாயிகள் குறைதீர் கூட்டம் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 27 Apr 2025 06:43 AM

மதுரை ஏப்ரல் 27: மதுரை (Madurai) மாவட்ட ஆட்சியர் (District Collector) அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் புகார் (Farmers Complaint) தெரிவித்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினர். மேலும், புகார் அளித்த விவசாயிகளை உள்ளூர் பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், நெல் மூட்டைகளை வாங்க மறுப்பதாகவும் கூறினர். ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். போலீஸார் தலையிட்டு விவசாயிகளை அமைதிப்படுத்தினர். நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது லஞ்ச புகார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் முன்வைத்து உரத்த சத்தமாக புகார்கள் தெரிவித்தனர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சக் கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடைக்காக லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து முந்தைய முறைகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

மிரட்டல் மற்றும் அலட்சிய நடவடிக்கைகள்

விவசாயிகள் மேலும் தெரிவித்ததாவது, காவல் நிலையங்களில் புகார் அளித்த விவசாயிகளை உள்ளூர் பிரமுகர்கள் மிரட்டுவதாகவும், நெல் மூட்டைகளை கையாண்டு அலட்சியமாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியும், அதனை முறையாக செயல்படுத்தாமல் அலட்சியமாக புறக்கணிக்கின்றனர் என்றும் தெரிவித்தனர்.

ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

இந்நிலையில், ஆட்சியர் சங்கீதா, விவசாயிகளை மேலும் புகார்கள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உடனடியாக தலையிட்டு விவசாயிகளை அமைதிப்படுத்தினர்.

திடீர் ஆய்வு மற்றும் நடவடிக்கை தேவை: விவசாயிகள் வலியுறுத்தல்

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க பொருளாளர் வீரமணி கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்கம் இதற்காக தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறது,” என்றார்.

தமிழக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தமிழக விவசாயிகள் குறைதீர் கூட்டம் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கேட்டு, உடனடி தீர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் முக்கியமான நிகழ்வாகும். இக்கூட்டங்களில், விவசாயிகள் தங்களது நிலப்பிரச்சினைகள், கொள்முதல் குறைபாடுகள், லஞ்ச புகார்கள், மற்றும்

அலட்சியமான அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நேரடியாக அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இந்த குறைகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாகும்.

ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்- நடிகை ஸ்ருதி ஹாசன்!
ரஜினி சார் என் அப்பாவை விட வித்தியாசமானவர்- நடிகை ஸ்ருதி ஹாசன்!...
மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்
மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்...
130 அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காக தயாராக உள்ளன - பாக். அமைச்சர்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காக தயாராக உள்ளன - பாக். அமைச்சர்!...
லக்கி பாஸ்கர் பட இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த சூர்யா...
லக்கி பாஸ்கர் பட இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த சூர்யா......
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மழை முன்னறிவிப்பு
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மழை முன்னறிவிப்பு...
ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்... தமிழகம் முழுவதும் ஆய்வு!
ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்... தமிழகம் முழுவதும் ஆய்வு!...
தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி!
தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி!...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... விசாரணையை தொடங்கிய என்ஐஏ!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... விசாரணையை தொடங்கிய என்ஐஏ!...
முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?
முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?...
NEET UG 2025 தொடர்பான சந்தேகம் இருக்கா? நியூ போர்டல் அறிமுகம்...
NEET UG 2025 தொடர்பான சந்தேகம் இருக்கா? நியூ போர்டல் அறிமுகம்......
முன்னாள் காதலர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!
முன்னாள் காதலர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!...