Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெங்களூரு சம்பவம்: 700 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளியை கைது செய்த போலீஸ்

Man Misbehaves With Woman on Bengaluru: பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் 2025 ஏப்ரல் 3 ஆம் தேதி வியாழக்கிழமை, ஒரு பெண்மீது அடையாளம் தெரியாத நபர் தவறாக நடந்து கொண்டார். இந்த சம்பவம் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் 10 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூரு சம்பவம்: 700 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து குற்றவாளியை கைது செய்த போலீஸ்
பெங்களூரு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 Apr 2025 09:44 AM

பெங்களூரு ஏப்ரல் 13: பெங்களூருவில் நடந்த வீதி சம்பவம் (Bengaluru crime) தொடர்பாக, சந்தோஷ் என்ற நபர் கேரளாவில் கைது (Man Arrested in Kerala) செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக 10 நாட்களாக பல மாநிலங்களில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையிலே அவரை பிடிக்க முடிந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் (Bangalore, Karnataka) சமீபகாலமாக பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2025 ஏப்ரல் 3 ஆம் தேதி வியாழக்கிழமை பெங்களூருவின் பிடிஎம் லேஅவுட் பகுதியில் இரவு நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் கவலை அடைய செய்துள்ளது. பெங்களூருவின் பி.டி.எம் லேஅவுட் பகுதியில் ஒரு பெண்மீது அடையாளம் தெரியாத நபர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் (woman misbehaving with an unidentified person) நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெறும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) மூலம் வீடியோ பதிவாகியுள்ளது.

700 சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தோஷை அடையாளம் காண மற்றும் அவரை கண்டுபிடிக்க இரண்டு சிறப்புக் குழுக்களை அமைத்தனர். இதில் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை அவர்கள் விரிவாக ஆய்வு செய்தனர். பெங்களூருவில் உள்ள BTM லேஅவுட் பகுதியில் 2025 ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றது.

வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதன் பின்னர், பொதுமக்களிடையே பரவலான கவலை மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டது. வீடியோவில் இரண்டு பெண்கள் ஒரு சாலையில் நடந்து செல்கிறார்கள். அந்த நேரத்தில், மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த ஒரு சாலையில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், திடீரென ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பின்னர் அந்த நபர் இடத்தை விட்டு தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது.

மூன்று மாநிலங்களில் தேடுதல்

சந்தோஷ், 26 வயதுடையவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சம்பவத்திற்கு பின்னர் அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்றதை போலீசார் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் கண்டறிந்தனர். தொடக்கத்தில் அவர் ஓசூர், சேலம் வழியாக கோழிக்கோடு சென்றதாக தெரியவந்தது. இறுதியாக கேரளாவின் நடுவனூர் என்ற இடத்தில் அவரை போலீசார் கைது செய்தனர்.

கைது, வழக்கு பதிவு மற்றும் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்குதல் மற்றும் பின்தொடர்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் தனியுரிமைக்காக விசாரணையில் பங்கேற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளியை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளின் தரம் சவாலாக இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் மற்றும் பெங்களூரு நகரத்தில் பரவலாக உள்ள கண்காணிப்பு கேமரா அமைப்புகள் மூலம் போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...