கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் – விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!

Pahalgam Terror Attack : சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயலால் முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளது. அப்பாவி மக்களின் உயிரை இலக்காகக் கொண்டு செயல்பட்ட பயங்கரவாதிகள் இந்த கொடூரமான செயலை அரங்கேற்றியுள்ளனர்.

கார் வேண்டாம்.. நேராக மீட்டிங் - விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் அவசர ஆலோசனை!

பிரதமர் மோடி ஆலோசனை

Published: 

23 Apr 2025 11:45 AM

காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்ற ஆண்கள் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் கொல்லப்பட்டனர், இதில் இரண்டு வெளிநாட்டினர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்துள்ளார். சவுதி சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே திரும்பிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அவசர ஆய்வு நடத்தினார்.

டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அசில் தோவல் விளக்கினார். விமானத்தில் இருந்து இறங்கிய உடனேயே பாதுகாப்பு வாகனத்தில் ஏறாமல் நேரடியாக ஆலோசனைக்கான அறையை நோக்கி நடந்து சென்றார் பிரதமர் மோடி.

இந்த கூட்டத்தில் தோவலுடன், வெளியுறவு அமைச்சரும், வெளியுறவு செயலாளரும் பங்கேற்றனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு விரைவில் கூடும். CCS கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில், நேற்று இரவு ஸ்ரீநகருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் துணை ஆளுநர் மற்றும் முதல்வருடன் நிலைமையை ஆய்வு செய்தனர்.

டெல்லி வந்த பிரதமர் மோடி

பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைகள், முகடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் வழக்கமான இடைவெளியில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் விமானப்படை படைகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்க NIAவும் களமிறங்கியது. இன்று NIA குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மறுபுறம், நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.

பஹல்காம் ஏன் சிக்கியது?

காஷ்மீர் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். காஷ்மீர், உயர்ந்த பனி மூடிய மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு அழகான பள்ளத்தாக்கில் பரவியுள்ளது. நீங்கள் அங்கு எங்கு பார்த்தாலும், அழகான காட்சிகளைக் காண்பீர்கள். அதனால்தான் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாபயணிகள் காஷ்மீரை நோக்கி வருகை தருகிறார்கள். பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மிகவும் கவர்ந்திழுக்கும் இடங்களும் உள்ளன. உலகின் மிக அழகான சுவிட்சர்லாந்தை ஒத்த இடங்களில் பஹல்காமும் ஒன்று. இந்தப் பகுதி மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பசுமையான புல்வெளிகள், அடர்ந்த தாவரங்கள், பின்னர் வெள்ளி மலைகள் போல தோற்றமளிக்கும் சுற்றியுள்ள பனி மூடிய மலைகள் என பஹல்கால் ஒரு சிறந்த சுற்றுலாதலமாகும். அதனால் அந்த இடத்தை பயங்கரவாதிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது