Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pahalgham Attack : பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்ற இந்தியா!

India Withdraws Pakistan Embassy Security | ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியா சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

Pahalgham Attack : பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை வாபஸ் பெற்ற இந்தியா!
பாகிஸ்தான் தூதரகம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 24 Apr 2025 15:36 PM

டெல்லி, ஏப்ரல் 24 : ஜம்மு & காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான (Pakistan Embassy) பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேலும் சில முக்கியமான முடிவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பரிதாப பலி

ஜம்மு & ஜாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேர் உட்பட மொத்தம் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தமர். ஜம்மு & காஷ்மீரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மரியாதையுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு & காஷ்மீர் தாக்குதல் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தடை விதிக்கப்பட்ட லக்‌ஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதல்லுக்கு பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உள்ளது தெரியவந்துள்ள நிலையில், இந்திய மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடும் எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி

பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரசை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றை இந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?...
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்......
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2...
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2......
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்...
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!...
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!...
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!...
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!...
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!...
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?...