Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பன்னீர் தர மாட்டீங்களா? களேபரமான திருமண மண்டபம்.. இளைஞர் செய்த அட்ராசிட்டி!

Uttar Pradesh Wedding Chaos: திருமண பந்தியில் பன்னீர் வைக்காததால், டென்ஷனான இளைஞர், பேருந்தை விருந்தினர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் 8க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பன்னீர் தர மாட்டீங்களா? களேபரமான திருமண மண்டபம்..  இளைஞர் செய்த அட்ராசிட்டி!
பன்னீர்Image Source: x/Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Apr 2025 11:44 AM

உத்தர பிரதேசம், ஏப்ரல் 29:  உத்தர பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் பன்னீர் கிடைக்காததால், ஆத்திரம் அடைந்த இளைஞர், திருமண மண்டபத்தில் மினி பஸ்ஸை ஒட்டி சென்று உள்ளார். இதில் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் சேதப்படுத்தி இருக்கிறார். திருமண பந்தியில் சரியாக உணவு பரிமாறப்படவில்லை என்றால்  சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.  குறிப்பாக,  திருமண பந்தியில் உணவு கிடைக்காததால், திருமணம் கூட நின்ற சம்பவங்கள்  கூட அரங்கேறி இருக்கின்றன.

பன்னீர் தர மாட்டீங்களா?

அண்டையில் கூட, கர்நாடகாவில் தண்ணீர் பாட்டில் பந்தியில் வைக்காததால் ஏற்பட்ட பிரச்னையில் கல்யாணமே நின்று போனது.  இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, திருமண பந்தியில் பன்னீர் வைக்காததால், இளைஞர் ஒருவர் திருமண மண்டபத்தில் மினி பேருந்தை ஏற்றியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சந்துவாலி மாவட்டத்தில் உள்ள ஹமீத்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹமீத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்நாத் யாதவ். இவரது மகளின் திருமணம் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது. கடந்த 2025 ஏப்ரல் 26ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்தது.

அனைத்து சுமூகமாக நடந்து கொண்டிருக்கும்போது,  அதே பகுதியை சேர்ந்த தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்துள்ளார்.  திருமணத்திற்கு வந்த அவர், நேராக  பந்தியில் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அதன்பிறகு,  அவருக்கு வைக்கப்பட்ட இலையில் பன்னீர் மட்டும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு பன்னீர் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

விருந்தினர்களை மீது பேருந்தை ஏற்றிய  இளைஞர்

இதனால், கடுப்பான தர்மேந்திர யாதவ் தனக்கு பன்னீர் வைக்காதது குறித்து வாக்குவாதம் செய்தார். இதனை அடுத்து, அவர்,  தனது மினி பேருந்தை திருமண மண்டபத்திற்குள் நுழைத்து ரகளையில் ஈடுபட்டார்.  இதில், திருமண மண்டபத்தில் இருந்த 8க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய ராஜ்நாத் யாதவ் கூறுகையில், “தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் பன்னீர் கேட்டார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்து திருமண விழாவின் நடுவில் ஒரு பேருந்தை ஓட்டினார்.

இதில் எட்டு பேர் காயமடைந்தனர். மேலும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக மதிப்புள்ள பொருட்கள் தேசம் அடைந்தன. அதன்பிறகு அவர், திருமண மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்றார்” என்றார். தர்மேந்திர யாதவ் வாகனத்தை திருமண மண்டபத்திற்குள் ஏற்றியதில் மணமகனின் தந்தை மற்றும் மணமகளின் மாமா உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் வாரணாசியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணமகள் வீட்டார் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!
இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!...
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?...
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!...
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?...
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!...
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்..
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்.....
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?...
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!...
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?...
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!...