திக் திக் நிமிடங்கள்… சட்டை கூட அணியாமல் விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல்…
Ambulance driver Ajmal: திரிச்சூரில், சிறுவன் ஒருவர் மாடியிலிருந்து விழுந்த செய்தியை கேட்டு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல் சட்டை கூட அணியாமல் 5 நிமிடங்களில் 9 கி.மீ தூரம் மின்னல் வேகத்தில் ஓடினார். அவர் துரித நடவடிக்கையால் சிறுவனுக்கு உடனடி சிகிச்சை கிடைத்து உயிர் காக்கப்பட்டது. அஜ்மலின் மனிதாபிமான செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கேரளா ஏப்ரல் 14: கேரள மாநிலம் திரிச்சூர் (Kerala, Thrissur) அருகே, நண்பனின் தம்பி மாடியில் இருந்து தவறி விழுந்த தகவல் அறிந்ததும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மல் (Ambulance driver Ajmal) என்பவர் சட்டை கூட அணியாமல் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற மனிதாபிமான செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. திரிச்சூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனது நண்பர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அஜ்மலுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது அஜ்மல் ஆம்புலன்ஸை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
திரிச்சூர் அருகே, சிறுவன் ஒருவர் மாடியில் இருந்து விழுந்ததை அறிந்த அஜ்மல் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சட்டை கூட அணியாமல் மின்னல் வேகத்தில் பயணித்தார். மருத்துவமனை 9 கி.மீ தொலைவில் இருந்தும், அவர் வெறும் 5 நிமிடங்களில் சென்றார். அவரது நேரடி நடவடிக்கையால் சிறுவனுக்கு உடனடி சிகிச்சை கிடைத்து உயிர் காக்கப்பட்டது. அஜ்மல், சட்டை போட நேரம் வீணாகும் என்பதால், அவசரத்தை முன்னிட்டு புறப்பட்டார். இது அவருக்கு மன நிறைவு அளித்ததோடு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்துள்ளன. அஜ்மலின் செயல், மனிதாபிமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
அவசரத்தின் முக்கியத்துவம்
சட்டை அணிவதற்காக தனது அறையான இரண்டாவது மாடிக்குச் செல்ல நேரமாகும் என்பதை உணர்ந்த அஜ்மல், சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதே முக்கியம் என்று கருதி, உடனடியாக சட்டை கூட அணியாமல் ஆம்புலன்ஸை மருத்துவமனைக்கு நோக்கி விரட்டினார்.
மின்னல் வேக பயணம் – உயிர் காப்பாற்றப்பட்டது
சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்கு அஜ்மல் வெறும் 5 நிமிடங்களில் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார். அவரது துரிதமான நடவடிக்கையால், கீழே விழுந்த சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்தது. மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஜ்மலின் விளக்கம்
இது குறித்து அஜ்மல் கூறுகையில், “நான் ஆம்புலன்ஸை கழுவிக் கொண்டு இருந்த போது எனக்கு போன் வந்தது. சட்டை போடுவதற்கு இரண்டாவது மாடியில் உள்ள அறைக்கு செல்ல வேண்டும். அவசரத்தை உணர்ந்த நான், அப்படியே புறப்பட்டுவிட்டேன்” என்றார். சிறுவனின் உயிரை காப்பாற்றியதில் அவருக்கு மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்
அஜ்மலின் இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய அஜ்மலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது செயல் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.