பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாராக உள்ள இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!
India Ready to Scrap Ceasefire with Pakistan | பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, ஏப்ரல் 24 : பாகிஸ்தான் (Pakistan) உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) ரத்து செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா உடனான ஒப்பந்தங்களை பாதுகாக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாக இந்தியா கருதும் நிலையில், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள்
ஜம்மு & காஷ்மீரில் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலா பயணிகளில் 2 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். பஹல்காமில் நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரட்ண்ட் (The Resistance Front) என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தான் மீது அடுத்து அடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாராகும் இந்தியா?
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த போதிலும் 2021 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தனை சேர்ந்த லக்ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகள் ஜம்மு & காஷ்மீரில் ஊடுருவி வருகிறது. பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் 2023 மற்றும் 2024 காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை ரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பும் இந்திய அரசு – கிரண் ரிஜிஜூ
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பஹல்காம் தாக்குதல் குறித்து நாட்டில் உள்ள அனைவரும் வருத்தமடைந்துள்ளனர். இதனை மனதில் கொண்டு இந்திய அரசு இன்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
கிரண் ரிஜிஜூ செய்தியாளர் சந்திப்பு
#Pahalgam terrorist attack: After attending the all-party meeting.
— kiran rijiju saysWatch it 👇#PahalgamTerroristAttack pic.twitter.com/lko2jVYdTb
— Chandan Prasad (@Mrchandanprasad) April 24, 2025
இவற்றின் அடிப்படையில் இந்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.