ஏப்ரல் 29-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு என்ன நடக்கும்?
Pakistanis in India: பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 2025 ஏப்ரல் 29க்குள் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. காலக்கெடுவை மீறினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் சுமார் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டு, அவர்களை நாடு விட்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் 29க்குள் இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் செல்ல உத்தரவு
டெல்லி ஏப்ரல் 29: பாகிஸ்தானியர்களுக்கு (Pakistan) இந்தியாவை (Leave India) விட்டு செல்ல 2025 ஏப்ரல் 29க்குள் காலக்கெடு (Dead line) அறிவிக்கப்பட்டுள்ளது. SAARC விசா மற்றும் மருத்துவ விசா வைத்தவர்கள் இந்த தேதிக்குள் நாட்டை விட்டு செல்ல வேண்டும். சட்டப்படி, காலக்கெடுவை மீறியவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் அமல் படுத்தப்படும். பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 200 பாகிஸ்தானியர்கள் இருக்கலாம் (There may be 200 Pakistanis in Tamil Nadu) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு வெளியேற காலக்கெடு
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில், இந்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் விரைவில் நாட்டைவிட்டு செல்ல வேண்டும் என்பதே அரசின் முடிவு. SAARC விசா கொண்டவர்கள் 2025 ஏப்ரல் 26க்குள், மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் 2025 ஏப்ரல் 29க்குள் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகள் பாயும்
இந்த காலக்கெடுவை மீறி இந்தியாவில் தங்குவோர் மீது குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 1946-ன் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விதிகளை மீறினால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது ரூ.3 லட்சம் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
பயங்கரவாதத்திற்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கை
இந்த உத்தரவு, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அனைத்து பாகிஸ்தானியர் தங்களது விசா காலாவதியாகும் தேதிக்கு முன்னரே இந்தியாவை விட்டு செல்ல வேண்டும். இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தவிர்க்க முடியாது.
தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் 200 பேர் வரை இருக்கலாம்
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு 29ம் தேதி வரை வெளியேறுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து, தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்களை கணக்கிடும் பணி முன்னெடுக்கப்பட்டது.
குடியுரிமை அதிகாரிகளின் தகவலின் படி, தமிழ்நாட்டில் 200 பாகிஸ்தானியர்கள் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. அவற்றை கண்டறிந்து, நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதல்
2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பயணிகளை தாக்கினர். பைசரான் பள்ளத்தாக்கில் AK-47, M4 கார்பைன் துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் தாக்குதலில் ஈடுபட்டனர். 26 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
பயணிகள் மத அடையாளங்களை தெரிவிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். பெரும்பாலான உயிரிழந்தவர்கள் ஹிந்துக்கள்; ஒரே கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் குதிரை ஓட்டுநரும் உள்ளனர். இந்த தாக்குதல் சமீபத்திய காலத்தில் மிகக் கொடியதாகக் கருதப்படுகிறது.