Summer Health Risks: பிரிட்ஜில் வைத்து இந்த பழங்களை சாப்பிடுகிறீர்களா..? கோடையில் மிகவும் ஆபத்து!
Beat the Heat Safely: பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளை அழித்துவிடும். எனவே, பழங்களை ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பே குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வெளியே வைக்க வேண்டும். பழங்களின் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே அவற்றை எடுத்து உட்கொள்வது நல்லது.

கோடைக்கால பழங்கள்
கோடை காலம் (Summer) தொடங்கியதும், எல்லோரும் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ந்த பொருட்களை எடுத்துகொள்ளவே விரும்புகிறார்கள். கடும் வெயிலில் இருந்து வந்தபிறகு நேராக வீட்டிற்குள் நுழைந்ததும் பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீரை எடுத்து குடிக்கிறோம். அவ்வாறு செய்வது பல வயிறு பிரச்சனைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், இன்னும் பலர் கடைகளில் வாங்கிய தர்பூசணி (Water Melon) போன்ற பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுகிறார்கள். சாலையில் சர்பத், மோர் போன்ற பானங்களை விற்கும் கடைகள் காணப்படுகின்றன. இதனுடன், பழக் கடைகளும் காணப்படுகின்றன. இந்தப் பழக் கடைகளில், பழங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு, குளிர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டியில் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற கடைகளில் கிடைக்கும் குளிர்ந்த பழங்களையோ அல்லது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த பழங்களையோ சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கோடைக்காலத்தில் இதுபோன்று நாம் செய்யும் தவறுகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. குளிர்ந்த பழங்களின் குளிர்ச்சி விளைவு உடலுக்கு உடனடியாக தீர்வை தரும் என்றாலும், பின்னர் உடல் வயிற்றுப் பிரச்சினைகள் அல்லது தொண்டைப் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐஸ் மற்றும் பிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்து பழங்களை சாப்பிடும்போது சளி, இருமல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பழங்களை ஏன் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது..?
பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளை அழித்துவிடும். எனவே, பழங்களை ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்திற்கு முன்பே குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வெளியே வைக்க வேண்டும். பழங்களின் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே அவற்றை எடுத்து உட்கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜில் வைக்காமல் நேரடியாகப் புதிய பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.
பழங்களின் அடிப்படை இயல்பு குளிர்ச்சியை வழங்குவதாகும். எனவே, பின்வரும் பழங்கள் உடலை குளிர்ச்சியடையச் செய்யாமல் குளிர்விக்கின்றன. எனவே, எந்தப் பழத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், சாதாரண வெப்பநிலையிலேயே சாப்பிட வேண்டும். இது உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.
அதன்படி, தனக்குள்ளே குளிர்ச்சியை வைத்திருக்கும் தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், கிர்ணிப்பழம், ஆரஞ்சு, பப்பாளி போன்ற தண்ணீர் சத்து நிறைந்த பழங்களை அப்போதே வெட்டி சுவைப்பது நல்லது. இவற்றை குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து சுவைக்கும்போது அதன் தன்மை கெடுவது மட்டுமல்லாமல், ஆரோக்கிய தன்மையையும் இழக்கும். அதேபோல், பழங்களை போன்று குளிர்ச்சி தன்மை கொண்ட தயிர், மோர் மற்றும் குளிர்ந்த நீர், பழச்சாறுகள் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் இருந்து அப்படியே குடிக்கக்கூடாது. அவற்றை எடுத்து வெளியே வைத்தபிறகு, சிறிது நேரத்திற்கு பிறகு உட்கொள்வது நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)