Health Tips: ஆரோக்கியமாக வாழ ஆசையா..? இவை இரண்டையும் குறைத்தால் போதும்!
Reduce Sugar and Salt Intake: உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரண்டு பொருட்களாகக் கருதப்படுகின்றன. இவை வெள்ளை விஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. நீங்கள் இவற்றை அதிகமாக உட்கொண்டால், காலப்போக்கில் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

உணவில் (Foods) ஏற்படும் சிறிய தவறுகள் கூட ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக மாறிவிடும். நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் உணவுமுறை ஆரோக்கியமாகவும், சத்தானதாகவும் இல்லாவிட்டால், அது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இரத்த சர்க்கரை (Blood Sugar) மற்றும் இரத்த அழுத்தத்திற்கு முறையற்ற உணவு முறையே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால்தான் சுகாதார நிபுணர்கள் உணவுகளை எடுத்துகொள்ளும்போது கவனமாக இருக்க அறிவுறுத்துகிறார்கள்.
30 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், எதிர்காலத்தில் நோய்களில் இருந்து தப்பிக்கவும் விரும்பினால் ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட உணவில் இரண்டு பொருட்களின் அளவைக் குறைக்க வேண்டும். அது என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உப்பு மற்றும் சர்க்கரை:
உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரண்டு பொருட்களாகக் கருதப்படுகின்றன. இவை வெள்ளை விஷம் என்றும் அழைக்கப்படுகின்றன. நீங்கள் இவற்றை அதிகமாக உட்கொண்டால், காலப்போக்கில் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதிகமாக சர்க்கரை சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு ஒரு காரணம், ஆனால் சர்க்கரை மற்றும் உப்பு உங்கள் இதயத்திற்கும் நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
சர்க்கரை:
அதிக சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் அதிக கலோரி உணவுகள் உடல் பருமன் மற்றும் குளுக்கோஸை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இது உங்கள் ஆரோக்கியத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
ஸ்வீட்ஸ், சோடா மற்றும் குளிர்பானங்களிலும் அதிக அளவு சர்க்கரை உள்ளது. எனவே நீங்கள் இவற்றை அதிக அளவில் உட்கொண்டால், அது ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
உப்பு:
சர்க்கரையைப் போலவே, அதிகமாக உப்பு சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான சோடியம் உப்பில் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், அது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
பெரியவர்களுக்கு, ஒரு நாளைக்கு 1500 மி.கி சோடியம் உட்கொள்வது போதுமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு மேல் அதிகமாக உட்கொண்டால், நீண்ட காலத்திற்கு அது சிறுநீரகம், கல்லீரல், வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்.
நாம் அனைவரும் தினமும் சர்க்கரை மற்றும் உப்பு இரண்டையும் உட்கொள்கிறோம். இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து காரணியாகக் கருதப்படுகிறது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை விரும்பினால், உங்கள் உணவில் இந்த இரண்டின் அளவையும் குறைப்பது நல்லது.