தொடங்கியது தனுஷ் – கிருதி சனோனின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் ஷூட்டிங்
Tere Ishk Mein Banaras Schedule Begins: நடிகர்கள் தனுஷ் மற்றும் கிருதி சனோனின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள்னர். மேலும் 2025-ம் ஆண்டு ஜனவரியில், தயாரிப்பாளர்கள் கிருதி சனோனி கதாபாத்திர டீசரை வெளியிட்டனர். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கும் காதல் நாடகத் திரைப்படமான தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். நடிகர்கள் தனுஷ் (Dhanush) மற்றும் கிருதி சனோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டெல்லியில் ஷூட்டிங்கை முடித்த பிறகு, நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் இப்போது உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்றுள்ளனர். படத்தின் ஒரு முக்கியமான காட்சியை அங்கு படமாக்கியுள்ளனர். 2013 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படமான ராஞ்சனாவின் படப்பிடிப்பை நடத்திய அதே இடத்தில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில், தயாரிப்பாளர்கள் ஒரு வீடியோவுடன் படப்பிடிப்பு நடந்ததை பகிர்ந்து கொண்டனர். ராஞ்சனாவின் தயாரிப்பின் சில காட்சிகளுடன் இந்த வீடியோ தொடங்கியது.
பின்பு, இயக்குனர் ஆனந்த் எல் ராய் பனாரஸின் பரபரப்பான தெருக்களில் சுற்றித் திரிவதையும், அவரது வரவிருக்கும் படத்தின் சில திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளையும் (BTS) அவரது படக்குழு உறுப்பினர்களுடன் அந்த வீடியோவில் காட்சியளித்தார்.
படக்குழு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ:
View this post on Instagram
ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் ஆகும். மேலும் கிருத்தி சனோன் உடன் அவரது முதல் படமுமான தேரே இஷ்க் மெய்ன். இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில், தயாரிப்பாளர்கள் நடிகை கிருதி சனோனின் கதாபாத்திர டீசரை வெளியிட்டனர். இது வரவிருக்கும் படத்திற்கான ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்தது. இது கிருதி சனோனின் கதாபாத்திரத்தின் ஆழம், தீவிரம் மற்றும் சிக்கல்களை சரியாக உள்ளடக்கி இருந்தது.
ஆனந்த் எல் ராய், ஹிமான்ஷு சர்மா, பூஷன் குமார் மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோரின் ஆதரவுடன் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மானின் அற்புதமான ஒலிப்பதிவு மற்றும் இர்ஷாத் கமிலின் கவிதை வரிகளுடன், இந்தப் படம் பார்வையாளர்களை ஒரு உணர்ச்சிபூர்வமான ரோலர் கோஸ்டரில் அழைத்துச் செல்லும் என்று உறுதியளிக்கிறது.
இயக்குனர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தேரே இஷ்க் மெய்ன் தனது இயக்கத்தில் 2013 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படமான ராஞ்சனாவின் கருப்பொருள் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். இது ராஞ்சனாவின் உலகத்திலிருந்து வருகிறது, இருப்பினும் இது ஒரு தொடர்ச்சி அல்ல, விரிவாக்கம். இது ஒரு புதிய கதையுடன் உணர்ச்சி ஆழத்தை சேர்க்கிறது, என்று அவர் விளக்கியுள்ளார்.