பல ஆண்டு காத்திருப்பு.. திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!
Pavani Reddy And Aamirs Wedding : தமிழில் சின்னதிரை மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சின்ன தம்பி என்ற தொடரின் மூலம் பிரபலமானார். இந்த தொடரை அடுத்ததாக தமிழில் பிக்பாஸ் சீசன் 5ல் நுழைந்த அவருக்கு, வாழ்க்கை துணையாக கிடைத்தவர் அமீர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இன்று 2025, ஏப்ரல் 20ம் தேதியில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

தமிழில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி ரெட்டி (Pavani Reddy and Aamir). நடிகை பாவனி தமிழில் விஜய் தொலைக்காட்சியில் வெளியான “சின்ன தம்பி” (Chinna Thampi) என்ற தொடரில் நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சின்னதிரைக்குள் நுழையும் முன் பாலிவுட் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கிலும் பல படங்களில் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் இறுதியாக நடிகர் அஜித்தின் துணிவு (Thunivu) படத்திலும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சின்னத்திரை தொடர்களை தொடர்ந்து பல படங்ககளில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பாவனி ரெட்டி. படங்களில் நடித்து பிரபலமான இவர், கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான பிக் பாஸ் சீசன் 5ல் (Bigg Boss Season 5 Tamil) போட்டியாளராக பங்கேற்றார்.
அதில் அவருடன் சக போட்டியாளராக பங்கேற்ற நடன கலைஞர் அமீர் என்பவரை காதலிக்க தொடங்கினார். சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்த காதல், தற்போது திருமண பந்தத்தில் இணைத்துள்ளது. இன்று 2025, ஏப்ரல் 20ம் தேதியில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர். தற்போது இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் திருமண புகைப்படங்கள் :
Happy married life Amir Pavni 🎊🎊🥳
Congratulations 🥳🥳✌️#BiggBossTamil8 #Amir #PavniReddy
pic.twitter.com/nuFCLnXQge— BB Mama (@SriniMama1) April 20, 2025
பாவனி ரெட்டி கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் சில பிரச்னைகளின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இரண்டாவது திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருந்த பாவனி தற்போது நீண்ட கால சிந்தனைக்கு பின், காதலர் அமீரை காதலித்து வந்தார். அமீர் பிரபல நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்கள் இருவரும், 4 வருடங்களாக லிவிங் டுகெதரில் இருந்து வந்தனர்.
மேலும் நீண்ட கால யோசனைக்கு பின்தான் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என நடிகை பாவனி ரெட்டி சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இவர்கள் இருவரின் திருமணமும் உறவினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
இந்த திருமண விழாவில் புதுமண தம்பதியர்களான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது கணவருடன் கலந்துகொண்டார். பிரபல தொகுப்பாளினி பிரியங்கவிற்கும் திருமணமாகி சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில், அமீர் மற்றும் பாவனி ரெட்டியின் திருமணத்தை முன்னால் நின்று தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் அவரின் கணவரும் இணைந்து நடத்தியுள்ளனர்.