Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தினமும் ரூ.45 சேமித்தால் போதும்.. ரூ.25 லடசம் பெறலாம்.. எப்படி தெரியுமா?

LIC Jeevan Anand Scheme | எல்.ஐ.சி நிறுவனம் பல வகையான காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தினமும் ரூ.45 முதலீடு செய்தால் ரூ.25 லட்சம் வழங்கும் ஜிவன் ஆனந்த் பாலிசி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் ரூ.45 சேமித்தால் போதும்.. ரூ.25 லடசம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 28 Mar 2025 18:44 PM

ஒவ்வொரு மனிதருக்கும் காப்பீடு மிகவும் அவசியம் ஆகும். காப்பீட்டை பொருத்தவரை மருத்துவ காப்பீடு (Medical Insurance) , ஆயுள் காப்பீடு (Life Insurance) என பல திட்டங்கள் உள்ளன. அவை எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான மக்கள் இந்த காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை வழங்கும் நிறுவனமாக உள்ளது எல்.ஐ.சி (LIC – Life Insurance Corporation of India). எல்.எஐ.சி பல பயனுள்ள காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எல்.ஐ.சியின் ஒரு காப்பீடு திட்டத்தில் மாதம் ரூ.1,358 முதலீடு செய்து ரூ.25 லட்சம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், அது என்ன திட்டம், அதில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் திட்டம்

அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் எல்.ஐ.சி நிறுவனம் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசி (LIC Jeevan Anand Policy). இந்த திட்டத்தில் மிக குறைந்த அளவாக தினமும் ரூ.45 செலுத்தி அதிக லாபத்தை பெற முடியும் என கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் காப்பீடு திட்டங்களுக்கு அதிக முதலீடு செய்ய வேண்டு என்ற எண்ணத்தில் முதலீடு செய்யாமலே இருப்பர். இந்த நிலையில், பெரிய அளவு பொருளாதாரா பின்னணி இல்லாத, சமானிய மக்களும் முதலீடு செய்யும் வகையில் தான் இந்த எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறைந்த முதலீட்டில் பெரிய தொகையை பெற விரும்பும் நபர்களுக்கு எல்.ஐ.சி-ன் இந்த ஜீவன் ஆனந்த் பாலிசி சிறந்ததாக இருக்கும். இந்த பாலிசி ஒரு டெர்ம் பாலிசியை போன்றது. அதனால், பாலிசியின் காலத்திற்குள் நீங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த திட்டத்தில் பாலிசிதார்ரகளுக்கு ஒன்று அல்ல பல முதிர்வு சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சம் பெறலாம்

எல்.ஐ.சியின் இந்த ஜீவன் ஆனந்த் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ.45 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை பொருத்தவரை நீண்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சிறந்த பலன்களை பெற முடியும். அதாவது தினமும் ரூ.45 என்ற அடிப்படையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் முதிர்ச்சிக்கு பிறகு ரூ.25 லட்சம் கிடைக்கும்.

தினமும் ரூ.45 என்ற அடிப்படையில் 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தீர்கள் என்றால், மொத்தமாக ரூ.5,70,500 வைப்பு வைத்திருப்பீர்கள். இப்போது பாலிசி காலத்தின்படி அடிப்படை காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக இருக்கும். அதனுடன் முதிர்வு காலத்திற்கு பிறகு இந்த தொகையை சேர்த்தால் சுமார் ரூ.8.60 லட்சம் திருத்தப்பட்ட போனசாகவும், ரூ.11.50 லட்சம் இறுதி போனசாகவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது" பிரதமர் மோடி!
”பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்... ஏ.ஆர்.ரகுமான் பேச்சு...
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
செல்வ வளம் பெருக தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!...
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!
பிறந்தநாளில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் டாப் 5 சாதனைகள்..!...
வெயிலால் ஏற்படும் நோய்களுக்கும் ஆயுர்வேதத்தில் சிகிச்சை.!
வெயிலால் ஏற்படும் நோய்களுக்கும் ஆயுர்வேதத்தில் சிகிச்சை.!...
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம்!
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம்!...
கனவில் வந்த மாரியம்மன்.. நடிகை லட்சுமி பகிரும் உண்மை சம்பவம்
கனவில் வந்த மாரியம்மன்.. நடிகை லட்சுமி பகிரும் உண்மை சம்பவம்...
சொரியாசிஸ் பிரச்னை.. தீர்வைக் கண்டறிந்த பதஞ்சலி ஆயுர்வேதம்!
சொரியாசிஸ் பிரச்னை.. தீர்வைக் கண்டறிந்த பதஞ்சலி ஆயுர்வேதம்!...
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அதிரடி...
வீட்டிலேயே மயோனைஸ் செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ!
வீட்டிலேயே மயோனைஸ் செய்வது எப்படி? சிம்பிள் ரெசிபி இதோ!...
ரெட்ரோ படத்தின் கதை அந்த பிரபல நடிகருக்காக எழுதியது....
ரெட்ரோ படத்தின் கதை அந்த பிரபல நடிகருக்காக எழுதியது.......