2018 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். டிஜிட்டல் மீடியாவில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். அனைத்து வகையான செய்திகளையும் கொடுப்பவர். குறிப்பாக பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்துபவர். திரைப்பட விமர்சனம், பிரபலங்களுடன் தொலைபேசி நேர்காணல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Senior Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
Waqf Bill: வக்ஃப் திருத்த சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு பின்னால் எழுந்துள்ள விளைவுகளை கவலையுடன் கவனித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த சட்டத்தை இந்து அறநிலையச் சட்டத்துடன் ஒப்பீட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 16, 2025
- 5:25 pm
மருத்துவமனை ஐசியுவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்!
ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார். இவ்வழக்கில் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 16, 2025
- 4:16 pm
Madurai: தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில் தெரியுமா?
கல்யாண சுந்தரேஸ்வரர் - பால மீனாம்பிகை திருக்கோயில், மணக்கோலத்தில் காட்சி தரும் மீனாட்சியால் பிரசித்தி பெற்றது. வில்வ மரம் தலவிருட்சமாக உள்ள இக்கோயில், பாண்டிய மன்னர் காலத்து தொன்மை வாய்ந்தது. திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வழிபாடு செய்வது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 16, 2025
- 2:35 pm
Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தீபமேற்றி வழிபடுவது ஆன்மிகத்தைப் பொறுத்தவரை மிக சிறந்த நேர்மறையான எண்ணமாக பார்க்கப்படுகிறது. ஐந்து முக விளக்கின் சிறப்பு, தீபம் ஏற்றுவதற்கான சரியான முறைகள் ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில்களில் நடக்கும் திருவிளக்கு பூஜைகளிலும் பங்கேற்று அதற்கான பலனைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 16, 2025
- 1:53 pm
Akshaya Tritiya: 2025 அட்சயத் திரிதியை எப்போது?.. அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள்!
அட்சய திருதியை சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகையாகும். அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படும் இந்நாளில் புதிய தொழில் தொடங்கலாம், நகை வாங்கலாம். இந்த நாளில் விநாயகர், லட்சுமி ஆகியோரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 16, 2025
- 11:25 am
Dream Astrology: செல்வத்துக்கான அறிகுறி.. இப்படியெல்லாம் கனவு வருதா?
சில குறிப்பிட்ட கனவுகள் விரைவில் செல்வம் பெறுவதைக் குறிக்கின்றன என சாஸ்திரங்கள் சொல்கிறது. பாம்புகளைக் காண்பது போன்ற கனவுகள் நல்ல நிதி நிலைமையையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது. இந்தக் கனவுகள் லட்சுமி கடாட்சத்தையும், வாழ்வில் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டும் என கூறப்படுகிறது. அதனைப் பற்றிப் பார்க்கலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 6:40 pm
Indian Justice Report 2025: இந்திய நீதி அறிக்கை 2025.. முன்னேறிய தென்மாநிலங்கள்!
'இந்தியா நீதி அறிக்கை 2025'ல் தெரிவிக்கப்பட்டதன்படி, நீதித்துறை மற்றும் காவல்துறை அமைப்புகளில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படும் அதே வேளையில், வட இந்திய மாநிலங்கள் பின்தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்த அறிக்கை, நீதி வழங்கும் திறனில் மாநிலங்களை தரவரிசைப்படுத்துகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 5:32 pm
முதலிடத்தில் பதஞ்சலி.. சுவாமி ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் தலைமைத்துவம் ஃபார்முலா!
சுவாமி ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தை வெறும் வணிகமாக மட்டுமல்லாமல் - ஆன்மீகம், வணிகம் மற்றும் சமூக நல்வாழ்வை கலக்கும் ஒரு சமூக இயக்கமாக கட்டமைத்துள்ளனர். அவரது சமூக தொழில்முனைவோர் மாதிரி தனித்துவமானது. பதஞ்சலி ஆயுர்வேதத்தின் அசாதாரண வெற்றிக்குப் பின்னால் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவின் தலைமை ஒரு முக்கிய உந்து சக்தியாக இருந்து வருகிறது
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 4:51 pm
Temple Special: அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவன் கோயில்!
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக பார்க்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் அமைந்த இந்த ஆலயத்தில் வழிபடுவதால் நோய் நீங்கும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜல்லிகை என்னும் அசுரப் பெண்ணின் பக்தியினால் இந்த கோயில் உருவானதாக சொல்லப்படுகிறது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 4:22 pm
சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்.. பெறுவது எப்படி?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க டாலரை அறிமுகம் செய்துள்ளது. ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்ட இந்த டாலர் 2, 4, மற்றும் 8 கிராம் எடைகளில் கிடைக்கிறது. இதனை ஆன்லைனில் முன்பதிவு செய்து, சன்னிதானத்தில் பெற்றுக்கொள்ளலாம். கடந்த இரண்டு நாட்களில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 2:19 pm
எப்போதும் கருமாரி துணையிருப்பாள்.. நடிகை நளினி வாழ்வில் நடந்த அதிசயம்!
நடிகை நளினி அவர்களின் கருமாரியம்மன் அன்னையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த அதிசய நிகழ்வுகளையும் பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கருமாரியம்மன் புகைப்படத்தை வெளியே எறிந்ததன் விளைவாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் தொடங்கி குழந்தை பிறப்பு வரை அதில் பேசியிருப்பார். அதனைப் பற்றிக் காணலாம்.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 1:20 pm
Sanipeyarchi: 2026ல் சனிப்பெயர்ச்சி.. தேதி, நேரத்தை அறிவித்த திருநள்ளாறு கோயில்!
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் 2026 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்போது சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் என தெரிவித்துள்ளது. இதனால் 12 ராசிக்காரர்களுக்கு சாதகம், பாதகமான விளைவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Apr 15, 2025
- 11:08 am